பிப்ரவரி 5ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Tasmac Holidays 2022-திருவண்ணாமலை மாவட்டத்தில் பிப்ரவரி 5ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிப்ரவரி 5ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tasmac Holidays 2022-வடலூர் ராமலிங்க அடிகளார் கடந்த 1874ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள், அதாவது தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து வரக்கூடிய நன்னாளில் ஜோதி வடிவமாக கலந்தார். அதன் பிறகு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணையாக விளங்கும் வள்ளலார் அவர்களை அனைவரும் போற்றி வணங்கி வருகின்றனர்.
ஜோதி திருவிழா வடலூரில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வள்ளலாரின் ஜோதி திருவிழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில் வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு நாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான கேன்டீன், அரசு மற்றும் தனியார் மதுபான கூடங்கள் ஆகியவற்றை 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வடலூர் ராமலிங்கனார் நினைவு நாளன்று மூட வேண்டும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையர் தெரிவித்து உள்ளார்.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி, அரசு மற்றும் தனியார் மதுபான கூடங்கள் அனைத்தும் விடுமுறை அளிக்கப்பட்டு விற்பனையின்றி மூடி வைக்கப்படும். இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2