/* */

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு சான்றிதழ்கள் சரிபார்த்தல் குறித்த அறிவிப்பு

திருவண்ணாமலையில் 26.07.2021-ம் தேதி முதல் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் மற்றும் உடற்தகுதிதேர்வு ஆகியவை நடைபெறவுள்ளது

HIGHLIGHTS

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு சான்றிதழ்கள் சரிபார்த்தல் குறித்த அறிவிப்பு
X

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் 2020 – 2021 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர்கள், சிறைகாவலர்கள் மற்றும் தீயணைப்புவீரர் ஆகிய பதவிக்கான எழுத்துதேர்வில் வெற்றி பெற்ற திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வரும் 26.07.2021-ம் தேதி முதல் திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல். உடற்கூறு அளத்தல் மற்றும் உடற்தகுதிதேர்வு ஆகியவை நடைப்பெறவுள்ளது. மேற்படி தேர்வில் கலந்துக்கொள்ள வரும் விண்ணப்பதார்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

1.உடற்தகுதி தேர்விற்கான அழைப்பு கடிதத்தை கொண்டுவர வேண்டும். [விண்ணப்பதாரர்கள் உடற்தகுதி தேர்விற்கான அழைப்பு கடிதத்தை www.tnusrbonline.org என்ற இணையதள முகவரியில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.]

2.தேர்வாளர்களுக்கு அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்டநேரத்தில் ஆஜராக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

3.தேர்வாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு தேதிக்கு நான்கு நாட்களுக்கு முன்பாக கோவிட்-19 பரிசோதனை செய்து அதற்கான மருத்துவசான்று எடுத்துவர அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு மருத்துவசான்று பெற்று வராத தேர்வாளர்களுக்குஅனுமதி மறுக்கப்படும்.

4.தேர்வாளர்களுக்கு கோவிட்-19 பரிசோதனையில் positive என தெரியவந்தால், தேர்வாளரின் பெற்றோர் / பாதுகாவலர், தேர்வாளரின் தேர்வு நாளன்று மருத்துவசான்றை தேர்வுமைய தலைவரிடம் நேரில் சமர்பிக்கவும் .அத்தேர்வாளரின்தேர்வுநாள் பின்னர் அறிவிக்கப்படும்.

5.தேர்வாளர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும் மற்றும் கைவசமாக இரண்டு முகக்கவசம் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

6. தேர்வாளர்கள் கலந்துகொள்ளவரும் போது ஏதாவது அரசு அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (AADHAR, PAN, VOTER ID, etc) கொண்டுவர அறிவுறுத்தப்படுவதோடு, அசல் சான்றிதழ்கள் கட்டாயமாக கொண்டு வரவேண்டும். மேலும் அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும்.

7. தேர்வாளர்கள் உடற்தகுதி தேர்வில் பங்குபெறும் போது அணிந்து வரும் T-Shirt,TRACK SUIT, SHORTS ஆகிய ஆடைகளில் எந்த ஒரு அடையாளகுறியீடு, சின்னங்கள், பெயர்கள் மற்றும் பலவண்ணநிறங்களில் (MULTI COLORS) ஆடைகள் அணிந்துவரக்கூடாது. பிளையின் கலர்ஸ் கொண்ட ஆடைகள் மட்டும் அணிந்துவர அறிவுறுத்தப்படுகிறது.

Updated On: 22 July 2021 6:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு