Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை: தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது
திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது
HIGHLIGHTS
திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய விழிப்புணர்வு ஊர்வலத்தை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். கிரிவலப்பாதை வழியாக சென்ற ஊர்வலம் அண்ணாமலைப் பகுதியில் காஞ்சி ரோடில் நிறைவடைந்தது.
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் தாய்-சேய் நலன் பாதுகாக்கப்படும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இது தொடர்பான துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர் இந்நிகழ்வில் செவிலியர்கள் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.