/* */

திருவண்ணாமலை அருகே கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

திருவண்ணாமலை அருகே பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருகே கோவிலுக்கு சென்ற பெண்ணிடம்  6 பவுன் சங்கிலி பறிப்பு
X

திருவண்ணாமலை புறவழி சாலை சகாய நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி, கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜமுனா (வயது 55). இவர் நாவக்கரை பகுதியில் உள்ள ஓம்சக்தி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.

ஆடி மாதம் என்பதால் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி முடிந்து ஜமுனா இரவு சுமார் 10 மணி அளவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

நாவக்கரை மெயின் ரோடு பகுதியில் ஜமுனா நடந்து வந்தபோது எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஜமுனாவின் கழுத்தில் இருந்த 6 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.

ஜமுனா திருடன், திருடன் என்று கூச்சலிட அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் சங்கிலியை பறித்த மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.இதுகுறித்து ஜமுனா திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 24 July 2022 6:49 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  6. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  7. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  8. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  9. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா