/* */

திருவண்ணாமலையில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியது

திருவண்ணாமலை மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியது

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியது
X

எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஆரணி பஜாரில் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள்  வெறிச்சோடியது

முழு ஊரடங்கு இன்று அமுலில் உள்ள நிலையில் திருவண்ணாமலையில் உள்ள பல திருமண மண்டபங்களில் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு திருமணம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் இன்று 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.

முன்னதாக நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சிகள் நடந்தது. கொரோனா விதிமுறைகள் காரணமாக ஆடம்பரமாக நடைபெறும் திருமணங்கள் மிகவும் எளிமையாக நடைபெற்றன. உறவினர்கள் வருகையும் குறைவாகவே இருந்தது.

திருவண்ணாமலையில் கடந்த வாரத்தை விட இன்று மக்கள் நடமாட்டம் ஓரளவு காணப்பட்டது. இன்று திருமண விழாக்கள், கோவில் கும்பாபிஷேகங்கள் என பல விழாக்கள் திருவண்ணாமலையில் இன்று நடைபெற்றது.

எனவே காவல் துறையினரும் மதியம் வரை அதிக அளவு கட்டுப்பாடுகளை விதிக்காமல் பொதுமக்களை ஒழுங்குபடுத்தி, விசாரித்து அனுப்பி வைத்தனர். பின்பு மதியத்திற்கு மேல் தடுப்புகள் அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டு தடையை மீறி சுற்றித் திரியும் நபர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

ஆரணியில் முழு ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முழு ஊரடங்கை யொட்டி ஆரணியில் காந்தி ரோடு, எஸ்.எம். ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கபட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் ஆரணி டவுன் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் தலைமையில் போலீசார் பழைய பஸ்நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டடனர். அப்போது தடையைமீறி சுற்றி திரியும் வாகன ஓட்டிகளின் வாகனத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். பறிமுதல் செய்த வாகனங்களை அதன் உரிமையாளர்கள் தங்களின் ஆவணங்களை சமர்ப்பித்து நாளை வாகனங்களை திரும்பப் பெற்று கொள்ளலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஆரணி பைபாஸ் சாலை அருகில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தன. பைபாஸ் சாலை வழியாக அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டன.

கீழ்பென்னாத்தூரில் காய்கறி, மளிகை, இறைச்சிகடைகள், டீக்கடைகள், நகைக்கடைகள் என அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. சாலைகள் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பெட்ரோல் பங்க், மருந்து, பால்கடைகள் திறந்து இருந்தன. கீழ்பென்னாத்தூர் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 23 Jan 2022 1:22 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  2. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  3. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  4. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  7. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  8. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  9. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  10. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...