/* */

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு

HIGHLIGHTS

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு
X

மாதிரி படம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஆரணி சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் பாண்டியன் (வயது 44) மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.

வழக்கம் போல் பாண்டியன் கடந்த 19 ந் தேதி இரவு டாஸ்மாக் மதுபான கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் 20 ந் தேதி கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது மது பாட்டில்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இது குறித்து சேத்துப்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருட்டு குறித்து விசாரணை நடத்தினர். திருடப்பட்ட மது மதிப்பு சுமார் ரூ.25 ஆயிரம்வரை இருக்கும் என கூறப்படுகிறது.

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 20 March 2022 12:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  4. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  5. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  6. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  8. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  9. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  10. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...