/* */

துரிஞ்சிகுப்பம் பெரிய ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

போளூர் அருகே துரிஞ்சிகுப்பம் ஊராட்சி பெரிய ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் அகற்றினர்

HIGHLIGHTS

துரிஞ்சிகுப்பம் பெரிய ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

துரிஞ்சிகுப்பம் பெரிய ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் துரிஞ்சிகுப்பம் ஊராட்சியில் 74 ஏக்கரில் பெரிய ஏரி அமைந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் சிலர் இந்த ஏரியில் 32 ஏக்கர் அளவுக்கு ஆக்கிரமித்து நெல், நிலக்கடலை ,உளுந்து என சாகுபடி செய்து வந்துள்ளனர். இதனால் ஏரியில் மழைநீரை சேகரிக்க முடியவில்லை.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று தொடங்கியது. ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா, ஏடிஎஸ்பி வெள்ளை துரை ஆகியோர் முன்னிலையில் ஏரியை அளவீடு செய்து 4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

வட்டாட்சியர் சன்முகம் ,சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் செந்தில்குமார், மண்டல துணை வட்டாட்சியர் சிவலிங்கம் மற்றும் வருவாய்துறையினர் உடனிருந்தனர். ஆரணி டிஎஸ்பி தலைமையில் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 1 Dec 2021 7:09 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை