/* */

போளூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது

போளூர் அருகே பிளஸ்-1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

போளூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது
X

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஜோ.எபிநேசர். 

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.அந்த மாணவிக்கு அதே கிராமத்தை சேர்ந்த கெல்வின் என்ற ஜோ.எபிநேசர் (வயது 22) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து வந்தார்.

இதுபற்றி கிராமத்தினர் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவை சேர்ந்த பரமேஸ்வரன் சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

இதையடுத்து அவர், வாலிபர் மீது போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜோ.எபிநேசரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவியை திருவண்ணாமலையில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 25 April 2022 9:56 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  2. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  6. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  7. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  9. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  10. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!