/* */

மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

HIGHLIGHTS

மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் கட்டிட தொழிலாளி உயிரிழப்பு
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராஜாதோப்பு கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சாவித்திரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று சோ.கீழ்நாச்சிப்பட்டில் வசிக்கும் லோகு என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் நேற்று 1-வது மாடியில் கட்டுமான பணியில் ஈடுபட்டார்.

அப்போது திடீரென சாவித்திரி 1- வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயமடைந்த சாவித்திரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு சென்றனர். செஞ்சி அருகே சென்றபோது சாவித்திரிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவரை செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சாவித்திரியின் மகன் ஏழுமலை கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் உபயதுல்லாகான் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 20 Jun 2022 1:41 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!