/* */

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க ஊராட்சி தலைவர்களுக்கு உத்தரவு

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நடவடிக்கை ஊராட்சி தலைவர்களுக்கு சட்டப்பேரவை துணைத்தலைவர் அறிவுறுத்தியுள்ளார்

HIGHLIGHTS

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க ஊராட்சி தலைவர்களுக்கு உத்தரவு
X

டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தேவையான பல்வேறு மருத்துவ பொருட்களை வழங்கிய பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் டெங்கு காய்ச்சல் , மழைக்கால தொற்றுநோய்கள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென 45 ஊராட்சித் தலைவர்கள் , ஊராட்சி செயலாளர்களுக்கு சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி உத்தரவிட்டார்.

ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆறுமுகம் , ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, கலந்துகொண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தேவையான பல்வேறு மருத்துவ பொருட்களை வழங்கினார். மேலும் கழிவுநீர்க் கால்வாய்களை தூர் வாரி சுத்தப்படுத்த வேண்டும், சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்று ஊராட்சித் தலைவர்கள் , ஊராட்சி செயலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Updated On: 17 Nov 2021 7:56 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  5. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  6. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!