/* */

கலசப்பாக்கம் அருகே 100 நாள் வேலை கேட்டு மக்கள் சாலை மறியல்

கலசப்பாக்கம் அருகே 100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

கலசப்பாக்கம்  அருகே 100 நாள் வேலை கேட்டு மக்கள் சாலை மறியல்
X

கடலாடி - செங்கம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஏரி கால்வாய் தூர்வாருதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடியில் கடந்த 2 மாதமாக 100 நாள் வேலை வழங்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கடலாடி- செங்கம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த வந்த கடலாடி காவல்துறை ஆய்வாளர் மற்றும் கலசப்பாக்கம் பிடிஓ உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் சமரசம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் கடலாடி - செங்கம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 26 Aug 2021 3:02 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!