/* */

விதிமுறையை மீறிய வாகனங்களுக்கு அபராதம்

செய்யாறு அருகே விதிமுறையை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

விதிமுறையை மீறிய வாகனங்களுக்கு அபராதம்
X

செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் கிருஷ்ணன் செய்யாறு, மாங்கால் கூட்ரோடு, தூசி, மாமண்டூர் உள்ளிட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி செல்வது, ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்குவது, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் வாகனங்களை இயக்குவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

அதன்பேரில் செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் ஆர்.கிருஷ்ணன் செய்யாறு, மாங்கால் கூட்ரோடு, தூசி, மாமண்டூர் உள்ளிட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது தனியார் பள்ளி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தகுதி சான்றிதழ், சாலை வரி செலுத்தாமல் இயங்கியது தெரியவந்தது.

மேலும் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச்சென்ற 2 ஆட்டோக்கள் மற்றும் அதிக பாரம் ஏற்றிச்சென்ற லாரி ஆகிய வாகனங்களை பறிமுதல் செய்து, ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும்,அதிகபாரம் ஏற்றிச்சென்ற 2 வாகன ஓட்டுனர்களின் உரிமத்தை ரத்து செய்யவும் பரிந்துரைத்தார்

Updated On: 27 April 2022 1:17 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  3. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  4. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  5. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  6. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. ஈரோடு
    ஈரோடு நந்தா கல்லூரி மாணவர்கள் 1,516 பேருக்கு பணி நியமன ஆணை
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 168 கன அடியாக அதிகரிப்பு
  10. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்