/* */

செய்யாற்றில் சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

செய்யாற்றில் சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியினா் (சிஐடியு) ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

HIGHLIGHTS

செய்யாற்றில் சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சாலையோர வியாபாரிகள் , கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்

செய்யாற்றில் உள்ள திருவத்திபுரம் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநிலக் குழு நிா்வாகி சங்கா் தலைமை வகித்தாா். குழு உறுப்பினா் அம்பிகா, முரளி, சந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின் போது சாலையோர வியாபாரிகளை விடுபடாமல் கணக்கெடுக்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். நகர விற்பனைக் குழுவில் இரண்டு பங்கு இடங்களை சாலையோர வியாபாரிகளுக்கு ஒதுக்க வேண்டும். அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் இலவசமாக தள்ளுவண்டிகளை வழங்க வேண்டும். தோதல் வாக்குறுதிப்படி வட்டியில்லா கடனாக ரூ.15 ஆயிரம் வீதம் கூட்டுறவு வங்கி மூலம் உண்மையான தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

நிறைவில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் துணைத் தலைவா் பிரபு நன்றி கூறினாா். ஆர்ப்பாட்டத்தில் சாலையோர வியாபாரிகள், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சர்தார் தலைமை தாங்கினார்.

மாவட்ட நிர்வாக குழு முத்தையின், தங்கராஜ் முன்னிலை வகித்தார். செங்கம் வட்டத்தில் குப்பநத்தம் அருகே உள்ள ஜே.ஜே.நகர் பகுதியில் 60 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளதை அளவீடு செய்து தமிழ்நாடு அரசு வருவாய் துறை கணக்கில் முழுவதுமாக கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஏழுமலை, குப்புசாமி, மகாவிஷ்ணு, முருகன், பாலமுருகன், கோபி ஆகியோர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் தங்கமணி நன்றி கூறினார்.

Updated On: 15 Nov 2023 1:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  2. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  3. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  8. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்