/* */

பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து

ஈரோடு மாவட்டம் பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில் சென்டர் மீடியனில் மோதி அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

HIGHLIGHTS

பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
X

விபத்துக்குள்ளான அரசு பேருந்து.

பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில் சென்டர் மீடியனில் மோதி அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஈரோடு மாவட்டம் லட்சுமிநகரில் இருந்து பவானி டிப்போ நோக்கி அரசுப் பேருந்து ஒன்று இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை, குருவரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த சிவசாமி (வயது 40) என்பவர் ஓட்டி வந்துள்ளார். நடத்துனராக எல்லீஸ்பேட்டையைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 58) என்பவர் இருந்துள்ளார்.

இந்த பேருந்து, காலிங்கராயன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் அதிகாலை 2 மணி அளவில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில், சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியனில் மோதி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில், ஓட்டுநர் சிவசாமி, நடத்துநர் ராஜ்குமார் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதனையடுத்து, காயமடைந்த இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தால், சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார் கிரேன் மூலம் பேருந்தை மீட்டனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Updated On: 2 May 2024 5:53 AM GMT

Related News