/* */

வீட்டில் இறந்த மகள். சோகத்தில் காப்புக்காட்டில் விஷமருந்தி உயிரிழந்த தந்தை

திருவண்ணாமலை அருகே ஆசிரியர், மகள் அடுத்தடுத்து மரணம்: போலீசார் விசாரணை

HIGHLIGHTS

வீட்டில் இறந்த மகள். சோகத்தில் காப்புக்காட்டில் விஷமருந்தி உயிரிழந்த தந்தை
X

தந்தை, மகள் அடுத்தடுத்து மரணமடைந்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை'

விருதுநகரை சேர்ந்தவர் சிவபாலன் 40; இவரது மனைவி ரம்பை 38; இவர்களது மகள் ஸ்ரீதேவிபிரியா 16; திருவண்ணாமலை அடுத்த சே.கூடலுார் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக சிவபாலன் பணிபுரிந்து வந்ததால், சே.கூடலுார் அடுத்த கீழ்செட்டிப்பட்டு கிராமத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில் இவரது மகள் ஸ்ரீதேவிபிரியா நேற்று முன்தினம் மாலை உடல்நலக்குறைவால் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இதையடுத்து உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அவரது உடல் நேற்று வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற சிவபாலன் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் அப்பகுதியிலுள்ள கண்ணமடை காப்புகாட்டில் விஷம் குடித்தும் கையை கத்தியால் அறுத்து கொண்டும் இறந்து கிடந்துள்ளார்.

தகவலின்படி தச்சம்பட்டு போலீசார் அவரது சடலத்தை மீட்டனர். பின் மகள் மற்றும் தந்தை அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 11 March 2022 6:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  2. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  3. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  4. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  5. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  6. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  7. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  8. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  9. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!