Begin typing your search above and press return to search.
வீடு புகுந்து திருட முயன்றவருக்கு தர்மஅடி
ஆரணியில் வீடு புகுந்து திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடிகொடுத்து காவல்துறையில் ஒப்படைத்தனர்
HIGHLIGHTS
ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தில் ஒத்தைவாடை தெருவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் மர்ம நபர் நுழைந்து திருட முயன்றார். ஜட்டி மட்டுமே அணிந்து உடலில் எண்ணெய் தடவி இருந்த அந்த நபரை அங்கிருந்தவர்கள் பிடித்து, கால்களை கட்டிப்போட்டு தர்ம அடி கொடுத்தனர்.
அதில் படுகாயம் அடைந்த அவரை பொதுமக்கள் ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். அவரை சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விசாரணையில் அவர், வேலூர் மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த முனுசாமி (வயது 52) என்றும், ராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் என்றும் தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.