/* */

கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டு சிறை

ஆரணியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி ஆரணி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது

HIGHLIGHTS

கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டு சிறை
X

கொலைமுயற்சி வழக்கில் தண்டனை பெற்றவர்கள்

ஆரணி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் யோகானந்தம் (வயது 33), இவரின் தம்பி சண்முகம். இருவரும் கடந்த 17.8.2016-ந்தேதி ஆரணி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு டீக்கடை எதிரே சென்றபோது, அந்த வழியாக வந்த பாண்டியன், ரஞ்சித் என்ற ரஞ்சித்குமார் ஆகியோர் சேர்ந்து, யோகானந்தத்தை கத்தியால் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.

அதில் படுகாயம் அடைந்த யோகானந்தம் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதுகுறித்து ஆரணி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி ஜி.ஜெயவேல், யோகானந்தம் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பாண்டியன், ரஞ்சித் என்ற ரஞ்சித்குமார் ஆகியோருக்கு இந்திய தண்டனை சட்டம் 294 பிரிவின்படி 3 மாத சிறை தண்டனையும், 324 பிரிவின்படி ஒரு வருட சிறை தண்டனையும், 307 பிரிவின் படி தலா 5 வருட கடுங்காவல் சிறை தண்டனையும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையடுத்து பாண்டியன், ரஞ்சித்குமாரை ஆரணி டவுன் போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 11 Nov 2021 10:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு