/* */

ஆரணி பகுதியில் போதை பொருள் விற்பனை செய்த 6 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்

ஆரணி பகுதியில் போதை பொருள் விற்பனை செய்த 6 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக டிஎஸ்பி தெரிவித்தார்.

HIGHLIGHTS

ஆரணி பகுதியில் போதை பொருள் விற்பனை செய்த 6 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்
X

ஆரணி துணை போலீஸ் சூப்பரண்டு ரவிச்சந்திரன் மற்றும் காவல் துறை அதிகாரிகள்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்திரவின் பேரில் ஆரணி நகரில் கஞ்சா குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 6 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. என ஆரணி துணை போலீஸ் சூப்பரண்டு ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் ஆரணி கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை இல்லை. என்றாலும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாக்கப்பட்டு வருகின்றனர். போதை பொருட்களை தடுக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, சாராய வழக்கில் கைது செய்யப்படுபவர்களின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன், சப்- இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 19 Aug 2022 11:38 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  4. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  5. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  7. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  8. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  9. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...