/* */

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் 1972-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

HIGHLIGHTS

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
X

ஆரணியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் 1972-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் தற்போது அரசு துறையில் பல்வேறு பிரிவுகளில் உயர் பதவிகளை வகித்து ஓய்வுபெற்றுள்ளனர்.

அதில் முன்னாள் மாணவரான டி.ஞானசேகரன், வெங்கடேசன், மோகன், எம்.பார்த்திபன், கே.பி.கே.செல்வராஜ், எஸ்.ராஜேந்திரன், ஏ.ராஜா ஆகியோர் ஒருங்கிணைந்து தற்போது சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுடன் ஒரு நன்னம்பிக்கை சந்திப்பு என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினர்.

கூட்டத்தில் மாணவர்களுக்கான வாய்ப்புகளும் வழிமுறைகளும், வல்லுனர்களுக்கான வழிகாட்டுதல், சீரிய சிந்தனைகளும், சிற்பிகளின் பங்களிப்பும் என்ற தலைப்புகளில் விளக்கம் அளித்து பேசினர்.

கூட்டத்தில் பள்ளி தலைமைஆசிரியை மகேஸ்வரி, உதவி தலைமைஆசிரியர் தர்மலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 March 2022 12:11 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  8. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை