Begin typing your search above and press return to search.
திருவள்ளூரில் ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா, 6 பேர் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது.
ஒரே நாளில் 197 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 249 பேர் கொரோனாவில், இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்டத்தில் 6 பேர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 991 ஆக உள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,09,688 ஆகவும், இதில் 1,07,038 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1659 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.