/* */

திருவள்ளூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வெழுதும் 32,931 மாணவர்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 138 தேர்வு மையங்களில் 32,931 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வெழுதும்  32,931 மாணவர்கள்
X

திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அரசு பொது தேர்வு எழுதினர்.

தமிழகத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு கடந்த, 1 ம் தேதி தொங்கி, இந்த மாதம், 22 ம் தேதி நிறைவடைந்தது. அதே போல் பிளஸ் 1 பொதுத்தேர்வு இந்த மாதம், 4 ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று 26-ஆம் தேதி முதல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி, வருகின்ற ஏப்ரல் மாதம், 8 ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில், 16,348 மாணவர்களும், 16,583 மாணவியர்களும் என மொத்தம், 32,931 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். இவர்கள் 138 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.


அதே போல் பார்வையற்றோர் 15 பேரும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சொல்வதை எழுதுபவர்கள் 540 பேரும் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

இந்நிலையில் தேர்வு மையங்களில், மாணவர்களுக்கு தேர்வு எழுவதற்காக தேவையான மேஜைகள் அமைத்தும், பதிவெண்கள் எழுதும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

மூன்று பள்ளிகளுக்கு ஒரு பறக்கும் படை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு தீவர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவள்ளூரில் உள்ள ஆர்.எம்.ஜெயின் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 26 March 2024 9:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!