/* */

மகளின் சாவில் மர்மம் : உறவினர் சாலை மறியல்..!

திருவள்ளூரில் மர்மமான முறையில் இறந்த தங்கள் மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி தாய் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

மகளின் சாவில் மர்மம் : உறவினர் சாலை மறியல்..!
X

சாலை மறியலில் ஈடுபட்டுள்ள இறந்த ஷாலினியின் தாய் மற்றும் உறவினர்கள் 

திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனை அருகே மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூர் நகரைச் சேர்ந்த ஷாலினி (வயது 25). மற்றும் திருவள்ளுவர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த முரளிதரன் (வயது 27). இருவருக்கும் சுமார் ஒரு வருட காலத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு குழந்தை பிறக்காத காரணத்தினால் அடிக்கடி ஷாலினியை முரளிதரன் துன்புறுத்தி வந்ததாகவும் இந்நிலையில் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான ஷாலினி வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளார்.


மேலும்பிரேதத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர், மேலும் மகளின் மரணத்தில் மர்மம் உள்ளதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் இதுவரை எந்தவொரு நடவடிக்கை எடுக்காததால் ஷாலினியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை எதிரி சாலை மறியலில் ஈடுபட்டனர்,

தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட ஷாலினி பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் காவல்துறையினர் சமரச பேச்சில் ஈடுபட்டனர். இது தொடர்பாக உரிய விசாரணை எடுப்பதாக கூறிய பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டு கலந்து சென்றனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்தில் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 28 March 2024 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  2. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  3. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  4. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  5. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  7. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  8. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  10. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!