/* */

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பேரணி

திருவள்ளூர் நகராட்சியில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பேரணியா சென்றனர்.

HIGHLIGHTS

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பேரணி
X

பைல் படம்.

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் நகராட்சியில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மனநிலை பிரிவு சார்பில்விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் திருவள்ளூர் நகராட்சியில் இருந்து 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் பயிற்சி செவிலியர்கள் கலந்துகொண்டனர். இந்த பேரணியின்போது கைகளில் தற்கொலை எண்ணத்தை கைவிட வலியுறுத்தியும், மன அழுத்தத்தை குறைக்க வழி முறைகளையும், மன அழுத்தத்தின்போது தற்கொலை முடிவுகள் எடுப்பதை தள்ளிப்போட வேண்டும் என்பன உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், மனநல மருத்துவரை கலந்து ஆலோசிக்க கோரியும், யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கைகளில் பதாகைகளை ஏந்தி அரசு மருத்துவமனை வரை பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் மன நலப் பிரிவு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Sep 2021 1:07 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  2. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  3. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  6. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  7. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  9. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  10. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!