/* */

இறையாமங்கலம் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை கொள்ளை

இறையாமங்கலம் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

HIGHLIGHTS

இறையாமங்கலம் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை கொள்ளை
X
பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் அடுத்த மப்பேடு அருகே உள்ள இறையாமங்கலத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் மப்பேட்டில் ஒரு மளிகைக்கடையில் வேலை செய்து வருகிறார்.

இவரது மகன் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மகன் அன்பரசனும் மருமகள் வைஷாலியும் அதே பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுவிட்டனர்.

மணியின் மனைவி வள்ளி வீட்டில் இருந்த போது காலை 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

தண்ணீர் கொடுத்து விட்டு பிறகு வள்ளி வீட்டை பூட்டிவிட்டு சாவியை குளியல் அறையில் வைத்து விட்டு மப்பேடு சென்றுள்ளார்.

மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 13 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து மணி மப்பேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 23 Aug 2021 11:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!