/* */

மணவாளநகரில் தானியங்கி இயந்திரம் மூலம் ரூ.2-க்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மணவாளநகரில் தானியங்கி இயந்திரம் மூலம்   ரூ.2-க்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி
X

பைல் படம்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3வது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் சமூக விலகலை கடைபிடித்தல், அத்தியாவசிய பொருள்களை வாங்கச் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். கபசுரக் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வெங்களத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மணவாள நகர் பேருந்து நிலையத்தில் ஊராட்சி மன்றம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து தானியங்கி முகக்கவச விற்பனை இயந்திரம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நிறுவப்பட்டது.

மணவாள நகர் பகுதியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் முகக்கவசம் இல்லாமல் வரும்போது 2 ரூபாய் செலுத்தி முகக்கவசம் பெற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும் என தனியார் தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், வெங்களத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் சுனிதா பாலயோகி, பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பாலயோகி, மாவட்ட கவுன்சிலர், கடம்பத்தூர் ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தானியங்கி இயந்திரம் மூலம் முகக் கவசங்களை பெற்றுக்கொண்டனர்.

Updated On: 18 Aug 2021 8:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  5. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  7. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  9. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  10. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!