/* */

பூந்தமல்லி அருகே 15 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்தவர் போக்சோவில் கைது

பூந்தமல்லி அருகே 15 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பூந்தமல்லி அருகே 15 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்தவர் போக்சோவில் கைது
X

திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 10 வகுப்பு படிக்கின்ற 15 வயது மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (25) என்ற இளைஞர் ஒருதலைப்பட்சமாக நீண்ட நாளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சதீஷ்குமார் பள்ளி மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்த விஷயம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மாணவியன் பெற்றோர் அந்த வாலிபரை கண்டித்துள்ளனர்.

இதனையடுத்து மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சதீஷ்குமார் மாணவியை வீட்டில் புகுந்து வலுக்கட்டாயமாக கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்து கற்பழிக்க முயற்சித்துள்ளார். இதனால் மாணவி பயந்து அலறி யடித்து கூச்சலிட்டுள்ளார். மாணவியின் சத்தத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து வீட்டில் கட்டி அடைத்து வைத்தனர் இதுகுறித்து வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் வெள்ளவேடு போலீசார் சதீஷ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

அதன்பிறகு சிறுமியின் உறவினர்கள் சதீஷ்குமாரின் குடும்பத்தினரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சதீஷ்குமாரின் உறவினர் காயமடைந்து பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சதீஷ்குமாரின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய மாணவியின் உறவினர்கள் 11 பேர் மீது வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 17 Feb 2022 1:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  2. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  3. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  4. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  5. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  7. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  8. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  9. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  10. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை