/* */

யூ டர்ன் பாதையை அடைத்து கட்டாய வசூல்: லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

செங்குன்றம் நல்லூர் சுங்கச்சாவடியில் யூ டர்ன் அடைத்து விட்டு கட்டாய வசூல் செய்வதாக கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

யூ டர்ன்  பாதையை அடைத்து கட்டாய வசூல்:  லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடியில் யூ டர்ன் அடைத்து விட்டு கட்டாய வசூல் செய்வதாக கூறி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

செங்குன்றம் அருகே சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடியில் யூ டர்ன் அடைத்து விட்டு கட்டாய வசூல் செய்வதாக கூறி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த, நல்லூர் சுங்கச்சாவடியில் ஏற்கனவே யு டர்ன் இருந்த நிலையில், தற்போது அதனை அடைத்து விட்டு சுங்கச்சாவடி நிர்வாகம் கட்டாய வசூலில் ஈடுபடுவதாகவும், அதற்கு காவல் துறை உடந்தையாக இருப்பதாகவும் கூறி லாரி உரிமையாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த சுங்கச்சாவடியில் போதிய வசதிகள் இல்லை எனவும், சுங்கச்சாவடிக்கு லாரி உரிமையாளர்கள் எதிரானவர்கள் இல்லை எனவும், சுங்கச்சாவடி காலாவதியாகி விட்டதாகவும், சுங்கச்சாவடிகளில் முறைக்கேடுகள் நடப்பதாகவும் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அப்போது பேசிய தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ், 55 சதவீத விபத்துகள் சுங்கச்சாவடி சாலைகளில் தான் நடக்கிறது எனவும், பஞ்சாப் மாநிலத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அரசு எடுத்து வருவது போல், தமிழக முதல்வரும் அதே போல காலாவதியான சுங்கச்சாவடிகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 60 கி.மீ.-க்குள் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றுவோம் எனக்கூறி 3 மாதங்களில் எடுப்போம் எனக்கூறி 10 மாதங்களாகியும் இதுவரை எடுக்கவில்லை எனவும், மோடி ஆட்சிக்கு வரும் போது சுங்கச்சாவடியே இருக்காது எனக்கூறிய நிலையில் இதுவரையில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை எனவும், வரும் 1-ஆம் தேதி வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாகவும் அவர் தெரிவித்தார்.


Updated On: 27 Jun 2023 4:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  10. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!