/* */

திருச்செந்தூர் அருகே இளம்பெண்ணை தாக்கி 21 பவுன் நகைகள் பறிப்பு

திருச்செந்தூர் அருகே இளம் பெண்ணின் கையை கத்தியால் வெட்டி 21 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

திருச்செந்தூர் அருகே இளம்பெண்ணை தாக்கி 21 பவுன் நகைகள் பறிப்பு
X

கத்தியால் தாக்கப்பட்ட சாந்தி.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காணியாளர்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது கணவர் ராஜ்குமார் ராஜஸ்தானில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சாந்தி அந்தப் பகுதியில் உள்ள வீட்டில் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார்.

இந்தநிலையில் இன்று அந்தப் பகுதியில் முகக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் கேஸ் சிலிண்டர் பழுது நீக்கித் தருவதாகக் கூறி சாந்தியிடம் கேட்டுள்ளார். அதற்கு சாந்தி மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் அந்த நபர் அடுத்தடுத்த வீடுகளுக்குச் சென்றுள்ளார்.

தொடர்ந்து வீட்டின் மேல் தளத்திற்கு சென்று சாந்தி வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் சாந்தி மட்டும் வீட்டில் தனியே இருப்பதை அறிந்த மர்மநபர் மீண்டும் சாந்தியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டின் மேல் தளத்திற்கு சென்று சாந்தியிடம் தங்கச் சங்கிலியை கழட்டித் தருமாறும் இல்லையென்றால் கொன்று விடுவதாகக் கூறி கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து சாந்தி சத்தம் போட முயற்சித்ததும் கையிலிருந்த கத்தியால் சாந்தியின் கையை வெட்டி விட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 16 பவுன் தாலி சங்கிலி மற்றும் ஐந்து பவுன் செயின் ஆகியவற்றை பறித்துக் கொண்டு வீட்டின் முன்பு நின்றிருந்த இருசக்கர வாகனத்தையும் எடுத்துக் கொண்டு அந்த மர்ம நபர் தப்பி ஓடி உள்ளார்.

கையில் ரத்த காயங்களுடன் கீழே வந்த சாந்தியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், சம்பவம் குறித்து ஆறுமுகநேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் நிகழ்ந்த சாந்தியின் வீட்டின் அருகேயுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து குற்றவாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் ஆறுமுகநேரியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 21 Nov 2023 2:50 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  2. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!
  3. அரசியல்
    மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?
  4. பொன்னேரி
    ஜிஎப்சி குலோபல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு போட்டி!
  5. திருப்பரங்குன்றம்
    கோயில்களில், இன்று மாலை சங்கடஹரசதுர்த்தி விழா!
  6. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  7. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  8. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்