Begin typing your search above and press return to search.
அதிமுக, நாம்தமிழர் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
தென்காசியில் இன்று அதிமுக, நாம்தமிழர் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர் .
சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்று தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்காசியில் அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தென்காசி கோட்டாட்சியரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேபோல் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த தென்காசி வேட்பாளர் வின்சன்ட் ராஜ் தென்காசி கோட்டாட்சியரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.