Begin typing your search above and press return to search.
கஞ்சா விற்பனை செய்த நபர் கைது
தென்காசி மாவட்டத்தில் கஞ்சா விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டல்புதூர் பேருந்து நிலையம் அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, அங்கு சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த அசன் மைதீன் என்பவரின் மகன் அப்துல்காதர்(46) மீது ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது