/* */

ஊரடங்கை மீறிய 20 பேரின் வாகனங்கள் பறிமுதல்

சேலம் அடுத்த மல்லூரில் ஊரடங்கை மீறிய 20 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ஊரடங்கை மீறிய 20 பேரின் வாகனங்கள்  பறிமுதல்
X

சேலம் அடுத்த மல்லூரில் ஊரடங்கை மீறிய 20 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லூர் மற்றும் பனமரத்துப்பட்டி பகுதிகளில் ஊரடங்கு காரணமாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது மல்லூர் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் ஊர் சுற்றியவர்களை மல்லூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அவர்களிடம் அத்தியாவசிய தேவையின்றி இருசக்கர வாகனங்களில் பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். மேலும் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர மாட்டோம் என அவர்களை உறுதிமொழி எடுக்க வைத்தனர். முக கவசங்களை சரியாக அணியவும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர். மேலும் ஊரடங்கு உத்தரவை மீறியதால் 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை மல்லூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 29 May 2021 6:54 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்