Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டையில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள் : தொற்று பரவும் அபாயம்
புதுக்கோட்டையில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டமாக குவிந்ததால் பொதுமக்களுக்கு தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தமிழக முதலமைச்சர் நேற்று ஒரு அறிவிப்பினை வெளியிட்டார் வரும் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் அதனை ஒட்டி 22 மற்றும் 23ம் தேதிகளில் அனைத்து ஊரடங்குதளர்வுகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அனைத்தும் செயல்படும் என அறிவித்திருந்தார்
அதன்படி புதுக்கோட்டையில் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்தும் தற்போது இயங்கத் தொடங்கியது காலையிலேயே புதுக்கோட்டை கீழ ராஜவீதி தெற்கு ராஜவீதி உழவர் சந்தை என பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக குவிந்து வருவதால் நோய்த் தொற்று பரவும் அச்சம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலவி வருகிறது.
அதேபோல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் பேருந்துகளில் செல்வதற்கு பொதுமக்கள் வராததால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காட்சி அளிக்கிறது.