/* */

உதகையில் மனநலம் குறித்த விழிப்புணர்வு பேரணி

செவிலியர்களுக்கு மனநல விழிப்புணர்வு நாடகம் கோலப்போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

உதகையில் மனநலம் குறித்த விழிப்புணர்வு பேரணி
X

உதகையில் மனநலம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலக மனநல வாரம் கடந்த 10-ம் தேதி முதல் வருகிற 16-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மனநல மருத்துவத் துறை சார்பில், சமமற்ற உலகில் மன ஆரோக்கியம் என்ற தலைப்பில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி உலக மனநலம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணி உதகை அரசு மருத்துவமனையில் இருந்து தொடங்கி ஸ்டேட் வங்கி வழியாக கலெக்டர் அலுவலகம் வரை சென்று செவிலியர் பயிற்சி பள்ளியை வந்தடைந்தது. தொடர்ந்து பயிற்சி பள்ளியில் உலக மனநல வார விழா நடந்தது. மாவட்ட மனநல குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி ராஜு கலந்து கொண்டு பேசினார்.

இதையடுத்து செவிலியர்களுக்கு மனநல விழிப்புணர்வு நாடகம், கோலப்போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. சிறந்த ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி, துணை முதல்வர் ஜெயலலிதா மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Oct 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு