/* */

நீலகிரி வனப்பகுதிகளில் வறட்சி: நீர் நிரப்பும் பணியில் வனத்துறை

வனப்பகுதிகளில் நிலவும் கடும் வெயிலால், வனவிலங்குகளுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, தொட்டிகளில் நீர்நிரப்பப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

நீலகிரி வனப்பகுதிகளில் வறட்சி: நீர் நிரப்பும் பணியில் வனத்துறை
X

வன விலங்குகளுக்கு தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க, வனப்பகுதிக்குள் குட்டைகள் அமைத்து, லாரி மூலம் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பும் வனத்துறையினர்.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு துவக்கம் முதலே கடும் உறைபனி பொழிவு காணப்பட்டது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 55 சதவீத வனப்பகுதியில் முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரி மற்றும் கூடலூர் வனக்கோட்டம் பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் உள்ள செடி கொடிகள் காய்ந்து, கருகின. செடி கொடிகள் அனைத்தும் எளிதில் தீப்பற்றும் அளவிற்கு கடும் வறட்சி நிலவுகிறது.

வனப்பகுதிகளை காட்டு தீயில் இருந்து பாதுகாக்கும் வகையில், முதுமலை புலிகள் காப்பகம், வெளி மண்டலம் மற்றும் உள் மண்டல பகுதிகளில், வனப்பகுதியில் அமைந்துள்ள உதகை - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை இருபுறமும் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது பல கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு துரித வேகத்தில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்ட வருவதால் காட்டுத்தீ ஏற்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வனப்பகுதியில் உள்ள விலை உயர்ந்த ஈட்டி, தேக்கு ,சந்தனம் போன்ற விலை உயர்ந்த மரங்களை பாதுகாக்கப்படும்.

இதுதவிர, யானை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள், அரியவகை பறவைகள் பாதுகாக்க முடியும். அத்துடன் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகளுக்கு வனப்பகுதிக்குள் தண்ணீர் வசதிகளை ஏற்படுத்தித்தர தமிழக அரசு நிதி ஒதுக்கி, அடர்ந்த வனப் பகுதிகளில் வனத்துறையினர் புதிதாக தொட்டிகள் அமைத்து லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பி வருகின்றனர். இதன்மூலம் புலி, மான், கரடி போன்ற விலங்குகள் தண்ணீர் அருந்தி தங்களது தாகத்தை தீர்த்துக் கொள்கின்றன.

Updated On: 19 March 2022 9:05 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...