/* */

ராசிபுரத்தில் 120 மதுபாட்டில்களை கடத்திய 2 வாலிபர்கள் கைது

ராசிபுரத்தில் மோட்டார் சைக்கிளில் 120 மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ராசிபுரத்தில் 120 மதுபாட்டில்களை  கடத்திய 2 வாலிபர்கள் கைது
X

ராசிபுரம் அருகே உள்ள சேந்தமங்கலம் பிரிவு ரோட்டில், ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டினர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது, அவர்கள் மோட்டார் சைக்கிளில் 120 மதுபாட்டில்களை வைத்து கடத்திச்சென்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் ராசிபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் (20), விக்னேஷ்வரன் (21) என்பதும், அவர்கள் திருச்சி மாவட்டம் துறையூர் தாத்தையங்கார்பேட்டை பகுதியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On: 3 July 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...