/* */

இராசிபுரத்தில் ரூ.13 கோடி மதிப்பில் புதிய சாலை: அமைச்சர் துவக்கி வைப்பு

இராசிபுரத்தில் ரூ.13 கோடி மதிப்பிலா புதிய சாலையை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

இராசிபுரத்தில் ரூ.13 கோடி மதிப்பில் புதிய சாலை: அமைச்சர் துவக்கி வைப்பு
X

இராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தார்சாலை அமைத்தல், கான்கிரீட் சாலை அமைத்தல் உள்ள பல்வேறு பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ், 79 இடங்களில் ரூ.12.95 கோடி மதிப்பீட்டில், புதிய தார் சாலைகள் அமைக்கப்படுகிறது. வார்டு எண். 8 பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில், பழுதடைந்துள்ள கழிப்பிடத்தை புதுப்பிக்கும் பணிகள் ரூ. 8 லட்சம் மதிப்பில் நடைபெறுகிறது. மொத்தம் ரூ.13 கோடி மதிப்பீட்டில் பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இராசிபுரம் நகராட்சி கமிஷனர்ஆஅசோக்குமார், நகராட்சி பொறியாளர் கிருபாகரன், முன்னாள் எம்.பி சுந்தரம், நகர செயலாளர் சங்கர் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

Updated On: 13 Dec 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  3. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  6. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  7. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!