/* */

பரமத்திவேலூர் அருகே டூ வீலர்கள் மோதி கொண்ட விபத்து: ஒருவர் பலி

பரமத்திவேலூர் அருகே டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரழந்தார்.

HIGHLIGHTS

பரமத்திவேலூர் அருகே டூ வீலர்கள்  மோதி கொண்ட  விபத்து: ஒருவர் பலி
X

பைல் படம்

கரூர் மாவட்டம், ராயனூரைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (50). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 22-ந் தேதி கரூரில் இருந்து பரமத்தியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மொபட்டில் வந்தார்.

பின்னர் மீண்டும் கரூருக்கு திரும்பிச் சென்றார். சேலம்-கரூர் பைபாஸ் ரோட்டில், பரமத்திவேலூர் பிரிவு அருகே வந்தபோது, அவருக்கு பின்னால் வந்த டூ வீலர் அவரது மொபட்டின்மீது மோதியது.

இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த, முத்துக்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 Aug 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...