/* */

பரமத்தி அருகே பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

பரமத்தி வேலூர் அருகே பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பரமத்தி அருகே பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
X

பைல் படம்.

பரமத்திவேலூர் ஊராட்சி ஒன்றியம் கூடச்சேரியில் நடைபெற்ற பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவர் திலகவதி தலைமை வகித்தார். வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், பஞ்சாயத்து தலைவர் சத்யா ஆகியேர் முன்னிலை வகித்தனர்.

வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) பாபு வேளாண்மை திட்டங்கள், பயிர் சாகுபடி பரப்பு குறித்து விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் எனவும், பயிர் இன்சூரன்ஸ் திட்டம் குறித்தும், இடுபொருட்கள் பெற முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி பேசினார்.

நிகழ்ச்சியில் பராம்பரிய நெல் ரகங்கள் அறிமுகம், தேர்வு, விதைநேர்த்தி, அமுத கரைசல், பஞ்சகாவ்யாவின் பயன்கள், தயாரிப்பு முறைகள், ஊட்டமேற்றிய தொழுஉரம், மண்புழு உரம், கலப்புப் பண்ணையம், நாட்டு ரக கால்நடை, கோழி, முயல், மீன் வளர்ப்பு மற்றும் மண்வளத்தை காக்கும் அங்கக மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் உதவி வேளாண்மை அலுவலர் பூபதி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் திரேகப்பிரியா ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

Updated On: 13 Sep 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு