/* */

செல்போன் பேசியபடி டூ வீலரில் பயணம்: 3 பேரின் லைசென்ஸ் ரத்து

நாமக்கல்லில் செல்போன் பேசியபடி டூ வீலரில் பயணம் செய்த 3 பேரின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.

HIGHLIGHTS

செல்போன் பேசியபடி டூ வீலரில் பயணம்: 3 பேரின் லைசென்ஸ் ரத்து
X

நாமக்கல் அருகே போக்குவரத்து அலுவலர்கள் வானக சோதனையில் ஈடுபட்டனர்.

இருசக்கர வாகனங்களில் 3 பேர் பயணம் செய்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதை தடுக்கும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் கடந்த 2 நாட்களாக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன் ஆகியோர் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது செல்போன் பேசியபடி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 3 பேரின் டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இருசக்கர வாகனங்களில் 3 பேர் பயணம் செய்தல், ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தல் போன்ற விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டு, 41 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த வழியாக வந்த கனரக வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக சப்தம் எழுப்பும் ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டன. இந்த சோதனையின் போது மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உமா மகேஸ்வரி, சரவணன், சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 11 May 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்