/* */

நாமக்கல் அருகே காரில் கடத்தப்பட்ட 1,350 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

நாமக்கல் அருகே காரில் கடத்தப்பட்ட 1,350 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே காரில் கடத்தப்பட்ட 1,350 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
X

நாமக்கல் அருகே ரேசன் அரிசி கடத்தி வந்த, காரை போலீசார் பறிமுதல் செய்து, அதன் டிவைரை கைது செய்தனர்.

சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ அகிலன், நாமக்கல் துணை தாசில்தார் ஆனந்தன், ஆர்ஐ சியாம் சுந்தர் மற்றும் போலீசார் சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாச்சல் பிரிவு ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்த வேனில் 50 கிலோ எடை கொண்ட 27 சாக்குப் பைகளில் சுமார் 1,350 கிலோ எடை கொண்ட ரேசன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காருடன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காரை ஓட்டி வந்த வரகூர் தாட்கோ காலனியை சேர்ந்த டிரைவர் ஜெகநாதன் (52) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரேசன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து டிரைவர் ஜெகநாதனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 April 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!