நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஒலிம்பியாட் தேர்வில் சாதனை!
நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஒலிம்பியாட் தேர்வில் சாதனை புரிந்துள்ளனர்!
HIGHLIGHTS
தேசிய அளவில் ஒலிம்பியாட் தேர்வில் சாதனை படைத்த, நாமக்கல் நேஷனல்பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஒலிம்பியாட் தேர்வில் சாதனை
நாமக்கல்,
நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஹம்மிங்பேர்ட் நடத்திய, ஒலிம்பியாட் தேர்வில் தேசிய அளவில் தகுதிச் சான்றிதழ்களும் பதக்கங்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தேசிய அளவில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியில், நாமக்கல் நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வணிகம் மற்றும் சைபர் பிரிவில் நடைபெற்ற ஒலிம்பியாட் தேர்வில் 39 மாணவர்கள் முதல் நிலையில் தேர்ச்சி பெற்று தேசிய அளவில் தரச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர். மேலும், ஒவ்வொரு பாடத்திலும் பதக்கங்களைப் பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் அனுஷாசக்தி, ருத்ரா, சிவதர்ஷன், சாதனா, தன்யாஸ்ரீ, சாருகேஷ்வர், கிரிநிதி, ரக்ஷித், சஞ்சய், கவிநயப்பிரியா, ஸ்ரீசப்தனா, ஹரிணி, ஹாசினி, ஸஷ்மிதா ஆகிய மாணவர்கள் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். சாதனை படைத்துள்ள மாணவர்களை பள்ளி சேர்மன் சரவணன், பள்ளி முதல்வர், மேல்நிலை வகுப்பு முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.