நாமக்கல் மாவட்டத்தில் 5 இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள்
namakkal news, namakkal news today-- நாமக்கல் மாவட்டத்தில் 5 இடங்களில், ஏப்ரல் மாதத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது
HIGHLIGHTS
namakkal news, namakkal news today- இதுகுறித்து, நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில், ஒவ்வொரு மாதமும் மின் நுகர்வோர்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டு, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையொட்டி ஏப்ரல் மாதத்தில் 5 இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது. வருகிற 5ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும். வருகிற 12ம் புதன்கிழமை காலை 11 மணியளவில் பரமத்திவேலூர் மின் வாரிய செயற்பொறியாளாளர் அலுவலகத்திலும், 15ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணியளவில் பள்ளிபாளையம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 19ம் தேதி புதன்கிழமை காலை 11 மணியளவில் திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 26ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திலும், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெறும்.
மின் நுகர்வோர் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி, சம்மந்தப்பட்ட பகுதிகளில்நடைபெறும் குறைதீர் கூட்ட நிகழ்ச்சிக்கு நேரில் வருகைந்து, மேற்பார்வை பொறியாளரிடம் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.