நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் எப்படி?
நாமக்கல் மாவட்டத்தில் ஒரேநாளில் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 39,352 ஆக உயர்ந்துள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் வரை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம், அதிகாரிகள், சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட கடும் முயற்சிகளின் பலனாக, கடந்த 6 நாட்களாக படிப்படியாக எண்ணிக்கை குறைந்து வருகிறது.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலின்படி, கடந்த 24,மணி நேரத்தில், நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், சேந்தமங்கலம், காளப்பாநாய்க்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், வெப்படை, திருச்செங்கோடு, பெரியமணலி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 39,352 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 822 பேர் சிகிச்சை குனமாகி வீட்டுக்கு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 33,930 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 5,080 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 342 ஆக உயர்ந்துள்ளது.