/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல்லில் இன்று நடைபெற உள்ள மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில், 1 லட்சம் பேருக்கு, தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
X

நாமக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில், ஒரு லட்சம் பேருக்கு, தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- நாமக்கல் மாவட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 14 லட்சத்து 64 ஆயிரத்து 300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, முதல்தவணை தடுப்பூசி, 12 லட்சத்து 33 ஆயிரத்து 950 பேருக்கும் (84.27 சதவீதம்), இரண்டாம் தவணையாக 9 லட்சத்து 16 ஆயிரத்து 745 பேருக்கும் (62.61) செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில், இதுவரை நடைபெற்ற 23 மெகா தடுப்பூசி முகாம்களில், 7,37,792 பேர் பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றுள்ளனர்.

இன்று 12ம் தேதி சனிக்கிழமை, 24ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அனைத்து கிராம பஞ்சாயத்துக்கள், டவுன் பஞ்சாயத்துக்கள், மற்றும் நகராட்சிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள, 401 நிலையான முகாம், 21 நடமாடும் குழுக்கள் என மொத்தம் 422 முகாம்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை தடுப்பூசி செலுத்தப்படும். மொத்தம் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு தவணை கூட தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களும், முதல் தவணை போட்டு, இரண்டாம் தவணை நிலுவையில் உள்ளவர்களும், அருகில் உள்ள முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 12 March 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
  9. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  10. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!