/* */

நாமக்கல்லில் கொரோனா தடுப்பூசி முகாமை தடுத்த போதை டிரைவர் கைது

நாமக்கல் நகரில் கொரோனா தடுப்பூசி முகாமை நடத்த விடாமல் தடுத்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் கொரோனா தடுப்பூசி முகாமை தடுத்த போதை டிரைவர் கைது
X

பைல் படம்.

நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள ஐயப்பன் கோவில் அருகே கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

இந்த முகாமில் நாமக்கல் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்ரமணியம் (50), மேற்பார்வையாளர் தன்ராஜ், பணியாளர் ராஜன், டிரைவர் செந்தில்குமார் ஆகியோர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, புதன்சந்தை முத்துஉடையாளர்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் தனபால் (35) என்பவர் அங்கு குடிபோதையில் வந்து, தகாத வார்த்தையால் அலுவலர்களை திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்தும், முகாமை நடத்த விடாமல் தடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து துப்புரவு ஆய்வாளர் சுப்ரமணியம், நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த தனபாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 Sep 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...