/* */

ஆரியூர் முத்துசாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம்

நாமக்கல் மாவட்டம் ஆரியூர் முத்துசாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆரியூர் முத்துசாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம்
X

நாமக்கல் மாவட்டம் ஆரியூர் முத்துசாமி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி இன்று தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது.

ஆரியூர் முத்துசாமி கோவிலில், 26ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து, 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு, 10 கி.மீ. தூரம் ஊர்வலமாக நடந்து சென்றனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஆரியூரில், பிரசித்தி பெற்ற முத்துசாமி கோவில் உள்ளது. கொங்கு வேளாளர் சமூக மணியன்குலம், கண்ணந்தைகுல குடிபாட்டு மக்களுக்கு பாத்தியப்பட்ட இக் கோவிலில், மகா கணபதி, சப்தகன்னிமார், கருப்பண்ணசுவாமி ஆகிய தெய்வங்கள் எழுந்தருளி உள்ளனர். 7ம் நூற்றாண்டில், இங்குள்ள ஆலமரத்தின் கீழ், சங்கம் புதரில் உருவான ஸ்ரீ முத்துசாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் சுற்று வட்டார கிராம மக்கள் பலரும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இக்கோவிலில் சுமார் 20 ஆண்டுகளுக்குப்பிறகு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணி முடிந்ததையடுத்து, வருகிற 26ம் தேதி காலை மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, இன்று, காலை, 6 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. காலை 10 மணிக்கு, மோகனூர் காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் புனித நீராடினர். அங்கிருந்து, 10,000க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள், தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு, யானை, குதிரை, பசு உள்ளிட்டவை புடைசூழ 10 கி.மீ., தூரம் ஊர்வலமாக நடந்து சென்று, கோவிலை அடைந்தனர். பின்னர் முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

இந்த பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 200 ஆண்டுகளுக்கு பின்னர் திருப்பணிகள் நடைபெறுவதை காண பல கிராமங்களில் இருந்தும் மக்கள் வந்து செல்கிறார்கள்.

நாளை 25ம் தேதி காலை 7 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், இரவு, 10 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை மறுநாள்26ம் தேதி அதிகாலை 4 மணிக்கு, புனித தீர்த்தம் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, காலை 7:35 மணிக்கு, மகா கணபதி, சப்தகன்னிமார், முத்துசாமி, கருப்பண்ணசுவாமி ஆலய கோபுர கும்பாபிஷேகம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறும்.

தொடர்ந்து மூலவர் சுவாமிகளுக்கு, மகா அபிஷகம், தச தரிசனம், மகா தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்படும். விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, மணியன்குலம், கண்ணந்தைகுல குடிபாட்டு மக்கள், ஆரியூர் கிராம கொங்கு வேளாளர் வழிபாட்டு மக்கள் மன்றம் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

கும்பாபிஷேக தினத்தன்று ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Updated On: 24 Jan 2023 10:53 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!