Begin typing your search above and press return to search.
வங்கதேச இந்துக்கள் மீதான தாக்குதல்: நாமக்கல்லில் விஎச்பி ஆர்ப்பாட்டம்
வங்கதேச இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாமக்கல்லில் விஎச்பி.,யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
வங்கசேத நாட்டில் துர்கா பூஜையின்போது மதவாதிகளால் இந்துக்கள்மீது மிகப்பெரிய தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளைக் கைது செய்ய வேண்டியும், இந்துக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் நாமக்ககல் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விஎச்பி மாவட்ட தலைவர் ராமசாமி போராட்டத்திற்கு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரகுபதி முன்னிலை வகித்தார். பாஜக பிரமுகர்கள் பிரனவ்குமார், பாலகோபால் மற்றும் திரளான விஎச்பி, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.