/* */

இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் அறிவிப்பு

டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் சேர்க்கை பெறுவதற்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

HIGHLIGHTS

இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் அறிவிப்பு
X

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்.

டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் சேர்க்கை பெறுவதற்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரியில், வருகிற 2022ம் ஆண்டு ஜுலையில் துவங்கும் வகுப்புகளுக்கான சேர்க்கைக்கு, வருகிற டிசம்பர் மாதம் 18ம் தேதி தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. ராணுவ கல்லூரியில் சேர அனுமத்திக்கப்படும் போது, அங்கீககரிக்கப்பட்ட பள்ளியில், 7ம் வகுப்பு தேறிய அல்லது 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும், 02.07.2009-க்கும் 01.01.2011-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த (அதாவது 01.07.2022 அன்று 11.5 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும்). ஆண் சிறுவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தேர்விற்கான விண்ணப்ப படிவம், விளக்கவுரை மற்றும் முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளின் கேள்வித்தாள்களை கட்டணம் செலுத்தி எழுத்து மூலமாக விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம். கட்டணம் எஸ்பிஐ, டெராடூன், உத்தரகண்ட் மாநிலத்தில் மாற்றத்தக்க வகையில், செக்காகவோ, இந்த ஆர்ஐஎம்சி.ஜிஓவி.இன் என்ற வெப்சைட் மூலமாகவோ செலத்தி, தி கமாண்டண்ட், ராஷ்ட்ரிய இந்தியன் மிலிட்டரி காலேஜ், டேராடூன் கண்டோன்மென்ட், டேராடூன் - 248 003, உத்தரகண்ட் மாநிலம், என்ற முகவரியில் விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.

தனியாக அச்சடிக்கப்பட்ட அல்லது நகல் எடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்ப கட்டணம் பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்கள் ஸ்பீட் போஸ்டில் பெற ரூ.600- ம், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் ரூ.555ம், ஜாதிச்சான்றுடன் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பபடிவம், பிற விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். டேராடூனிலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள், பூர்த்திசெய்யப்பட்டு கன்ட்ரோலர் ஆப் எக்ஸாமினேசன்ஸ், டிஎன்பிஎஸ்சி, சென்னை 600 003 என்ற முகவரிக்கு வருகிற 31ம் தேதி மாலை 5.45 மணிக்கும் சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். மற்ற விபரங்களை ஆர்ஐஎம்சி.ஜிஓவி.இன் என்ற இண்டர்நெட் முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

18.12.2021 அன்று நடைபெறும் எழுத்துத் தேர்வு ஆங்கிலம், கணக்கு மற்றும் பொதுஅறிவு ஆகிய தாள்களை கொண்டதாகவும், ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே தேர்வு எழுத இயலும். எழுத்துத்தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும். மேலும், விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286-233079 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 Oct 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  2. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  3. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  6. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  7. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  8. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!