Begin typing your search above and press return to search.
நாமக்கல் பகுதிகளில் 29ம் தேதி மின்சார விநியோகம் தடை
நாமக்கல் பகுதியில், வரும் 29ம் தேதி மின்சார விநியோகம் தடை செய்யப்படும் இடங்கள் விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
HIGHLIGHTS
இது குறித்து, நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் (பொ) ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் துணைமின் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வரும் 29ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல். மாலை 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.
இதனால், நாமக்கல் டவுன், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிபட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஒ காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.