Begin typing your search above and press return to search.
நாமக்கல்லில் ஆர்.எஸ்.பாரதி மீது அதிமுக சார்பில் புகார்
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது நாமக்கல்லில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் புகார்
HIGHLIGHTS
நேற்று முன்தினம் அம்பத்தூரில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் அவதூறாக பேசியதாகவும் ஆர்.எஸ்.பாரதி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று நாமக்கல் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் மாவட்ட செயலாளர் முரளி பாலுச்சாமி தலைமையில் 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நாமக்கல் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நாமக்கல் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட செயலாளர் முரளி பாலுச்சாமி, முதல்வரின் பெயருக்கு கலங்கம் ஏற்படும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசி வரும் ஆர்.எஸ்.பாரதி மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.